NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

நோயாளர்களுக்கான இலவச உணவு வழங்குவதில் ஏற்பட்டுள்ள சிக்கல்!

உணவுப்பொருட்களின் விலை அதிகரிப்பினால் அரச வைத்தியசாலைகளில் நோயாளர்களுக்கு வழங்கப்படும் உணவின் தரத்தில் குறைபாடு காணப்படுவதாக வெளியாகும் குற்றச்சாட்டுகளால் அரச வைத்தியசாலைகள் கடும் நெருக்கடியை எதிர்கொண்டுள்ளன.

உணவுப்பொருட்களின் விலைகள் அதிகரிப்பு, வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்படும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு, இலவச உணவில் தங்கியிருப்பது போன்றவற்றின் காரணமாக அதிகரிக்கும் சிரமங்கள் குறித்து சுகாதார துறை அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

வைத்தியசாலைகளில் அனுமதி பெறும் நோயாளர்களின் எண்ணிக்கை குறிப்பிடத்தக்க அளவு அதிகரித்துள்ளது என தெரிவித்துள்ள சுகாதார துறை அதிகாரிகள், தனியார் வைத்தியசாலைகளில் அறவிடப்படும் கட்டண அதிகரிப்பு காரணமாகவே அதிகளவானோர் அரச வைத்தியசாலைகளை நாடுவதாக தெரிவித்துள்ளனர்.

இதன் காரணமாக அரச வைத்தியசாலைகளில் வழங்கப்படவேண்டிய இலவச உணவின் அளவும் அதிகரித்துள்ளது. இது ஏற்கனவே பலவீனமாக உள்ள வளங்கள் மீது மேலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதன் காரணமாக தற்போதைய உணவு விநியோகம் குறித்து மறு ஆய்வு செய்யவேண்டிய நிலையேற்பட்டுள்ளது என அவர்கள் மேலும் தெரிவிக்கின்றனர்.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles