NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

படகு கவிழ்ந்ததில் ஆசிரியர் உட்பட 16 பேர் பலி – இந்தியாவில் சம்பவம்!

இந்தியாவின் குஜராத் மாநிலத்தின் வதோதரா புகா் பகுதியில் உள்ள ஹா்ணி ஏரிக்கு 4 ஆசிரியா்கள் தலைமையில் 24 பள்ளி மாணவா்கள் நேற்று(18) சுற்றுலா சென்ற படகு எதிா்பாராதவிதமாக ஏரியில் கவிழ்ந்துள்ளது.

இதனைத்தொடர்ந்து, அப்பகுதியில் இருந்தவா்கள் தீயணைப்புப் படையினர்கள் அங்கு விரைந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனா்.

இந்த சம்பவத்தில் 14 பள்ளி மாணவா்களும், 2 ஆசிரியா்களும் உயிரிழந்துள்ளனர். ஒரு மாணவா் மட்டும் உயிருடன் மீட்கப்பட்டுள்ளார். படகில் 24 மாணவா்கள் வரை இருந்ததாக கூறப்படுவதால், உயிரிழப்பு மேலும் அதிகரிக்கும் வாய்ப்புள்ளது.

இந்த நிலையில், இந்த விபத்து தொடர்பாக 18 பேர் மீது குஜராத் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles