பதுளை நெடுங்குடியிருப்பு ஒன்றில் பாரிய தீப்பரவல் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பதுளை மாப்பாகலை பகுதியில் நேற்றிரவு நேற்றிரவு 7.30 அளவில் இத் தீ பரவல் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இத் தீ பரவல் ஏற்பட்டு பல மணி நேரத்திற்கு பின்னர் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில் 6 வீடுகள் முழுமையாக சேதமடைந்ததுடன், மூன்று வீடுகள் பகுதியளவில் சேதமடைந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
தீயணைப்பு பிரிவினர் மற்றும் பொதுமக்கள் இணைந்து தீப்பரவலை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இத் தீப்பரவல் ஏற்பட்டமைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை என்பதுடன் பதுளை பொலிஸ் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றது.