NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

பஸ்களில் அதிக ஒலி எழுப்பும் கேசட் பிளேயர்கள் குறித்து அரசாங்கம் கவனம்!

பஸ்களில் அதிக ஒலி எழுப்பும் கேசட் பிளேயர்களின் ஆபத்து குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.

பஸ்களின் உள்ளே அதிக ஒலி காரணமாக பயணிகளுக்கு ஏற்பட்டுள்ள இன்னல்கள் மற்றும் இடையூறுகளை கருத்தில் கொண்டு இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மத்திய சுற்றாடல் அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

அதிக சத்தத்துடன் இயங்கும் பஸ்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதற்கும் சாத்தியம் இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே, எதிர்காலத்தில் பஸ்களினால் ஏற்படும் ஒலி மாசுபாட்டைக் குறைப்பதற்கு மத்திய சுற்றாடல் அதிகார சபை மற்றும் சுற்றாடல் அமைச்சும் இணைந்து ஒழுங்குப்படுத்தும் வேலைத்திட்டமொன்றை தயாரிக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles