NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

பஸ்ஸிலிருந்து கீழே குதித்து இளைஞன் தற்கொலை!

இந்தியா – பெரம்பலூரிலிருந்து, திருச்சி மாவட்டம் துறையூருக்கு அரச பஸ்ஸொன்று நேற்று முன்தினம் சென்றுள்ளது.

இந்நிலையில், பஸ் அடைக்கம்பட்டி அருகே சென்று கொண்டிருந்தபோது 21 வயதான வினோத் என்னும் வாலிபர், திடீரென நான் பஸ்ஸிலிருந்து கீழே குதித்து சாகப் போகிறேன் என தொலைபேசியில் சத்தமாக கூறியபடி பஸ் படிக்கட்டிடம் வந்து திடீரென வெளியில் குதித்துள்ளார்.

சம்பவத்தைக் கண்ட சக பயணிகள், கூச்சலிட, சாரதி உடனடியாக பஸ்ஸை நிறுத்தினார். பயணிகள் வாலிபரை மீட்க ஓடியபோது அது பலனற்றுப் போனது.

கீழே குதித்ததில் தலையில் பலத்த காயம் ஏற்பட சம்பவ இடத்திலேயே வாலிபர் உயிரிழந்தார்.

சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த பொலிஸார் வாலிபரின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.

வினோத் குறித்து விசாரிக்கையில், அவர் பூக்கடையொன்றில் தொழில் செய்து வந்தது தெரிய வந்துள்ளது.

மேலும் அவர் தனியார் கல்லூரியொன்றில் கல்வி பயிலும் பெண்ணொருவரை காதலித்து வந்துள்ளார்.

அவரது காதலியுடன் ஏற்பட்ட தகறாரின் காரணமாக அவர் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா என பொலிஸார் விசாரித்து வருகின்றனர்.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles