NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

பாடசாலைக்குள் வளைகாப்பு – ஹட்டனில் சம்பவம்

ஹட்டன் கல்வி வலயத்துக்கு உட்பட்ட வட்டவளை பிரதேசத்தில் அமைந்துள்ள பிரபல பாடசாலையொன்றில் கர்ப்பிணியான ஆசிரியைக்கு வளைகாப்பு செய்த சம்பவமானது சமூக வலைத்தளங்களில் மிகவும் விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளது. 

குறித்த சம்பவம் கடந்த 6ஆம் திகதி இடம்பெற்றுள்ள நிலையில், பாடசாலை கல்வி நடவடிக்கைகளுக்கு இடையூறு ஏற்பட்டதாகவும் பாடசாலை அதிபர் இதற்கு உடந்தையாக செயற்பட்டதாகவும் விமர்ச்சிக்கப்பட்டு வருகின்றது. 

மேலும், பாடசாலை நேரத்தில் இலங்கை பாடகி அசானியை அழைத்து, கடந்த மாதம் நிகழ்ச்சியொன்றினையும் நடாத்தியிருந்திருக்கின்றார்கள் எனவும் அறியமுடிந்தது.

Share:

Related Articles