NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

பாடசாலை தவணை ஆரம்பிக்கும் முன்னர் விசேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம்!

(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)

பாடசாலை தவணை ஆரம்பிக்கும் முன்னர் விசேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

இந்த வேலைத்திட்டம் நாட்டின் அனைத்து மாகாணங்களையும் உள்ளடக்கும் வகையில் முன்னெடுக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

அதேவேளை, கொழும்பில் உள்ள 144 பாடசாலைகளை உள்ளடக்கிய விசேட மாதிரி டெங்கு ஒழிப்பு சுத்திகரிப்பு வேலைத்திட்டம் இந்த வார இறுதியில் நடைமுறைப்படுத்தப்படும் என அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles