NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

பிரான்சில் விருது வென்ற இலங்கை தமிழர்!

(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)

பிரான்ஸ் – பரிசில் ஆண்டுதோறும் நடத்தப்படும் ‘சிறந்த பாண் உற்பத்தியாளருக்கான போட்டியில், இந்த ஆண்டுக்கான விருதை இலங்கையைச் சேர்ந்த தர்ஷன் செல்வராஜா வென்றுள்ளார்.

La meilleure baguette de Paris என்ற இப்போட்டி தமிழில் ‘பரிசின் சிறந்த பாண்’ என்று அர்த்தப்படும்.

இதில் 30 வயதான தர்ஷன் செல்வராஜா தயாரித்த பாணின் தரம் மற்றும் சுவை நடுவர்களைக் கவர்ந்து, முதல் பரிசை வென்றிருக்கிறது.

பிரான்சின் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் இன் எலிசே மாளிகையில், அடுத்துவரும் ஓர் ஆண்டுக்கு பாண் தயாரிக்கும் வாய்ப்பும் தர்ஷனுக்கு கிட்டியுள்ளது.


இந்நிலையில் போட்டியில் வெற்றபெற்றதோடு மட்டுமல்லாது பிரான்சின் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் மாளிகைக்கான பாண் தாயாரிக்கும் சந்தர்ப்பத்தையும் பெற்ற இலங்கை தமிழருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles