NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

பீகார் – காஷ்மீரில் அடுத்தடுத்து பதிவான நிலநடுக்கங்கள்!

இந்தியா – பீகாரின் அராரியா நகரில் இன்று காலை 5.35 மணியளவில் மித அளவிலான நிலநடுக்கம் உணரப்பட்டு உள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 4.3 ஆக பதிவாகி உள்ளது என தேசிய நிலநடுக்க அறிவியல் மையம் தெரிவித்து உள்ளது.

நிலநடுக்கம் 10 கிலோமீற்றர் ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

இதனை தொடர்ந்து ஜம்மு மற்றும் காஷ்மீரில் இன்று காலை 10.10 மணியளவில் மற்றொரு நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது. இந்நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.0 ரிச்டராக பதிவாகியுள்ளது.

எனினும், நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பொருள் இழப்புகள் உள்ளிட்ட விவரங்கள் எதுவும் இதுவரை வெளியிடப்படவில்லை.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles