NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

பீகார் புகையிரத விபத்து – நால்வர் பலி!

இந்தியா – பீகாரில் உள்ள ரகுநாத்பூர் புகையிரத நிலையத்தின் அருகே நேற்று இரவு புகையிரதம் ஒன்று தடம் புரண்டு விபத்துக்குள்ளாகியதில், 4 பேர் உயிரிழந்துள்ளனர்.

மேலும் பலர் காயமடைந்துள்ள நிலையில், மீட்புக் படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், பீகார் புகையிரத விபத்து குறித்து அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தனது எக்ஸ் வலைதளத்தில், விபத்தில் பலியானோரின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்ததுடன், பக்சர் மாவட்டத்தில் புகையிரதம் தடம் புரண்ட இடத்தில் மீட்பு பணிகள் போர்க்கால அடிப்படையில் இடம்பெற்று வருகின்றது மீட்புப் பணிகள் முடிவடைந்த பின்னர் தண்டவாளம் சீரமைக்கும் பணி ஆரம்பமாகும் எனவும் பதிவிட்டுள்ளார்.

Share:

Related Articles