NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

புகையிரதத்தில் மோதி நபர் பலி – கிளிநொச்சியில் சம்பவம்!

கிளிநொச்சியில் புகையிரதத்தில் மோதி குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த விபத்து சம்பவம் நேற்று (18) மாலை கிளிநொச்சி – அறிவியல்நகர் பகுதியில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

விபத்தில் முறிகண்டி பகுதியை சேர்ந்த 43 வயதான இரு பிள்ளைகளின் தந்தையே உயிரிழந்துள்ளார்.

அநுராதபுரத்தில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கிப் பயணித்த யாழ். ராணி புகையிரதத்தல் அவர் மோதுண்டு உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles