NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

புகையிரதத்தில் மோதி பாடசாலை மாணவன் உயிரிழப்பு!

கொழும்பு, தெமட்டகொடை புகையிரத நிலையத்திற்கு அருகில் புகையிரதத்தில் மோதி பாடசாலை மாணவன் ஒருவன் உயிரிழந்துள்ளதாக தெமட்டகொடை பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விபத்து இன்று வெள்ளிக்கிழமை (25) பிற்பகல் இடம்பெற்றுள்ளது.

உயிரிழந்த மாணவன் பாடசாலை முடிவடைந்த பின்னர் மேலதிக வகுப்புக்குச் செல்வதற்காக ரயில் நிலையத்திற்குச் சென்றுள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை தெமட்டகொடை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles