முல்லைத்தீவு. தேவபுரம் பகுதியில் புதுக்குடியிருப்பு கிணற்றிலிருந்து 992 தோட்டாக்கள் மீட்க்கப்பட்டுள்ளதாக புதுக்குடியிருப்பு காவல்துறையினர் தெரிவித்தனர்.
மேற்படி கிணறு அமைந்துள்ள காணியின் உரிமையாளர், காணியில் உள்ள பழைய கிணற்றை துப்புரவு செய்யும் போதே குறித்த தோட்டாக்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
குறித்த சம்பவம் தொடர்பில் புதுக்குடியிருப்பு காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
மேலும்,அவை போரின் போது பயன்படுத்தப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்