NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

புத்தாண்டை முன்னிட்டு வெலிக்கடை சிறைச்சாலையில் மிகப்பெரிய பாற்சோறு தயாரிக்க சிறைச்சாலை திணைக்களம் தீர்மானம் !

இந்த ஆண்டு தமிழ் – சிங்கள புத்தாண்டுக்கு மிகப்பெரிய பாற்சோறு தயாரிக்க சிறைச்சாலை திணைக்களம் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி எதிர்வரும் 14ஆம் திகதி 700 கிலோ பாற்சோறு வெலிக்கடை சிறைச்சாலை சமையலறையில் தயாரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இது வெலிக்கடை சிறைச்சாலை, வெலிக்கடை சிறைச்சாலை வைத்தியசாலை மற்றும் வெலிக்கடை பெண்கள் சிறைச்சாலையில் உள்ள கைதிகளுக்கானது எனவும் நேற்றைய நிலவரப்படி, அந்த பிரிவில் அடைக்கப்பட்ட மொத்த கைதிகளின் எண்ணிக்கை 4064 ஆகும்.

இதேவேளை, வெலிக்கடை சிறைச்சாலையில் உள்ள கைதிகளுக்கான புத்தாண்டு கொண்டாட்டம் இன்று சிறைச்சாலை வளாகத்தில் இடம்பெறவுள்ளது. அதற்காக மரண தண்டனை விதிக்கப்பட்ட கைதிகள் உட்பட அனைத்து கைதிகளும் ஒன்றிணைக்கப்பட உள்ளதாகவும் இவர்களுக்கு இசை கச்சேரியும் நடைபெறவுள்ளதாக சிறைச்சாலை திணைக்களம் தெரிவித்துள்ளது .

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles