NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

புனித மரியாள் பழைய மாணவர்களின் கிரிக்கெட் விழா!

எட்டியாந்தோட்டை புனித மரியாள் தமிழ் மகா வித்தியாலத்தின் பழைய மாணவர்களின் மாபெரும் கிரிக்கெட் விழாவும் ஒன்றுகூடலும் நாளை 20ஆம் திகதி காலை ஆரம்பமாகவுள்ளது.

நாளை முதல் திங்கட்கிழமை 22ஆம் திகதி வரை போட்டிகள் நடைபெறவுள்ளன.

பாடசாலையின் பழைய மாணவர் சங்கத்தின் ஏற்பாட்டில் எட்டியாந்தோட்டை வின்சன்ட் பெரேரா மைதானத்தில் இந்த கிரிக்கெட் விழா நடைபெறவுள்ளது.
அணிக்கு 11 பேரை கொண்டதாக நடைபெறவுள்ள கிரிக்கெட் போட்டிகளில் ஒவ்வொரு வருடங்களை சேர்ந்த க.பொ.த சாதாரண தர வகுப்பு அணிகள் கலந்துகொள்ளவுள்ளன.

35ற்கும் மேற்பட்ட அணிகள் போட்டிகளில் கலந்துகொள்ளவுள்ள நிலையில், நாளை காலை நடைப்பவணியைதொடர்ந்து முதற் சுற்று போட்டிகள் நடைபெற்று 21ஆம் திகதி அடுத்த கட்ட சுற்றுகளும் 22 ஆம் திகதி அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டிகள் நடைபெறவுள்ளன.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles