NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

புல்மோட்டை – நிலாவெளி வரை கனிய மணல் அகழ்வு: போராட்டத்தில் மக்கள்

திருகோணமலை – குச்சவெளி பிரதேச செயலகத்திற்கு முன்னால் பாரிய கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று நேற்று (05) இடம்பெற்றது.

திருகோணமலை – புல்மோட்டை தொடக்கம் நிலாவெளி வரையான கடற்கரைப் பகுதிகளில் புவி சரித்திரவியல் சுரங்க திணைக்களத் தலைவரின் தன்னிச்சையான ஒப்பந்தத்தின் மூலம் கனிய மணல் அகழ்வை ஆராய அளவீடு செய்ய எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் உடனடியாக இடைநிறுத்தப்பட வேண்டுமென கோரியே இந்த கவனயீரப்பு ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

பிரதேச வாசிகள், சங்கங்களின் பிரதிநிதிகள், கடற்தொழில் மீன்பிடி சங்கத்தின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு எதிர்ப்புக்களை வெளியிட்டனர்.

இதன்போது, “அழிக்காதே அழிக்காதே இயற்கை வளத்தை அழிக்காதே”, “சுரண்டாதே சுரண்டாதே மக்களின் வாழ்வாதாரத்தை சுரண்டாதே”, “நிறுத்து நிறுத்து GSMB தலைவரின் தன்னிச்சையான முடிவை நிறுத்து”, “அழிக்காதே அழிக்காதே சுற்றுலாத்துறையை அழிக்காதே”, “மண் அகழ்வு ஒப்பந்தத்தை உடன் நிறுத்து” என்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறு ஆர்ப்பாட்டக்காரர்கள் கோசங்களை எழுப்பினர்.

ஆர்ப்பாட்டம் நடைபெற்ற இடத்திற்கு விஜயம் செய்த குச்சவெளி பிரதேச செயலாளர் கே.குணநாதனிடம் குறித்த விடயத்தை நாட்டின் ஜனாதிபதி, கிழக்கு ஆளுநர், மாவட்ட செயலாளர் ஆகியோர்களின் கவனத்திற்கு கொண்டு செல்லுமாறு கோரிய மனுவொன்றை ஆர்ப்பாட்டக்காரர்கள் கையளித்து வைத்தனர்.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles