NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

பேருவளையில் பஸ்கள் விபத்து – பலர் காயம்!

பேருவளை பகுதியில் நேற்றிரவு இடம்பெற்ற பஸ் விபத்தில் பலர் காயமடைந்துள்ளதாக பேருவளை பொலிஸார் தெரிவித்தனர்.

காலி – கொழும்புக்கிடையில் சேவையில் ஈடுபடும் குளிரூட்டப்பட்ட சொகுசு பஸ் ஒன்றும், கொழும்பு – கதிர்காமம் நகரங்களுக்கு இடையில் சேவையில் ஈடுபடும் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் ஒன்றுமே இவ்வாறு மோதி விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்படுகிறது.

விபத்தில் காயமடைந்த 6 பேர், பேருவளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, மேலதிக சிகிச்சைகளுக்காக நாகொடை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

இந்ந விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பேருவளை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.

Share:

Related Articles