(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)
கொழும்பு – பேலியகொடை மெனிங் சந்தையில் வியாபாரிகள் பாரிய ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
பேலியகொடை மெனிக் சந்தையில் அமைந்துள்ள கடைகளை வெளி மாவட்ட வியாபாரிகளுக்கு வழங்கும் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்தே இந்த ஆர்ப்பாட்டம் இன்று (26) முன்னெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த ஆர்ப்பாட்டத்திற்கு நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்திருந்தபோதும் வியாபாரிகள் தொடர்ச்சியாக ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தின்போது பலர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், சம்பவ இடத்தில் பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.