NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

போலி ஆவணங்களுடன் ஜோர்ஜியா செல்ல முயன்ற 9 பேர் கைது!

(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)

போலி ஆவணங்களை சமர்ப்பித்து ஜோர்ஜியா நாட்டுக்குச் செல்ல முயன்ற கிராம உத்தியோகத்தர் ஒருவர் உட்பட 9 பேரை குற்றப்புலனாய்வு அதிகாரிகள் குழு கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து இன்று (17) கைது செய்துள்ளது.

கைதுசெய்யப்பட்ட கிராம உத்தியோகத்தர் மன்னாரைச் சேர்ந்த 36 வயதுடைய நபர் எனத் தெரிவிக்கப்படுவதுடன், ஏனைய சந்தேக நபர்கள் யாழ்ப்பாணம், வவுனியா, முல்லைத்தீவு மற்றும் மன்னார் ஆகிய பகுதிகளில் வசிக்கும் 31, 36, 33, 34 மற்றும் 22 வயதுடையவர்களாவர் எனத் தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில் குறித்த சந்தேகநபர்கள் தொடர்பில் மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles