NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

மட்டக்களப்பில் 8 மாணவர்கள் குளவிக்கொட்டுக்கு இலக்கு!

மட்டக்களப்பு – வவுணதீவு, குறிஞ்சாமுனை பகுதியில் 8 பாடசாலை மாணவர்கள் குளவிக் கொட்டுக்கு இலக்காகியுள்ளனர்.

வவுணதீவு – கன்னங்குடா பகுதியிலுள்ள பாடசாலையொன்றின் மாணவர்களே குறிஞ்சாமுனை பகுதியில் இன்று காலை இவ்வாறு குளவிக் கொட்டுக்கு இலக்காகியுள்ளனர்.

பாதிக்கப்பட்ட மாணவர்கள் தாண்டியடி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும், குறித்த பகுதியிலுள்ள குளவி கூடுகளை அகற்றுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles