NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

மண்மேடு சரிந்து விழுந்ததில் உயர்தர மாணவர் பலி!

மாத்தறை – கொலொன்ன தடயம் கந்த பிரதேசத்தில் நேற்று (22) இரவு வீடொன்றின் மீது மண்மேடு சரிந்து விழுந்ததில் விபத்து ஏற்பட்டுள்ளது.

குறித்த விபத்தில் தொரபனே பாடசாலையில் கல்வி பயிலும் 17 வயதுடைய உயர்தர மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மண் மேடு சரிந்துள்ளமையால் அப்பகுதிக்கு தற்போது செல்ல முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த மாணவனின் சடலம் தற்போது ஓமல்பே வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles