மதபோதகர் ஜெரோம் பெர்னாண்டோ இன்று காலை நாடு திரும்பினார்.
இந்நிலையில், நீதிமன்ற உத்தரவுக்கு அமைவாக 48 மணித்தியாலங்களுக்குள் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் ஆஜராகி வாக்குமூலம் வழங்குவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
ஜெரோம் பெர்னாண்டோ கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு வரும் போது அவரை கைது செய்ய வேண்டாம் என சிஐடிக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டிந்ததோடு, அவர் இலங்கை வந்ததும், 48 மணி நேரத்திற்குள் அவரிடம் வாக்குமூலம் பெறுமாறும் சிஐடிக்கு உத்தரவிட்டிருந்தது.
மத நல்லிணக்கத்திற்கு தீங்கு விளைவிக்கும் வகையில் கருத்து வெளியிட்டமைக்காக அவரை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்த நிலையில் அவர் நாட்டை விட்டு வெளியேறியமை குறிப்பிடத்தக்கது.