NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

மதுபானசாலைகள் இரு தினங்களுக்குப் பூட்டு!

தமிழ் – சிங்கள புத்தாண்டை முன்னிட்டு நாடு முழுவதிலும் உள்ள மதுபான கடைகள் நாளை (13) மற்றும் நாளை மறுதினம் (14) மூடப்படும் என மதுவரி திணைக்களம் அறிவித்துள்ளது.

அத்துடன், சட்டவிரோத மதுபான விற்பனை தொடர்பிலான சுற்றிவளைப்புகளை மேற்கொள்ள விசேட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, மது வரி குற்றங்கள் தொடர்பான தகவல்களை வழங்க 1913 என்ற விசேட தொலைபேசி இலக்கத்தை தொடர்புகொள்ள முடியும் என மதுவரி திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Share:

Related Articles