NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

மதுரங்குளி பகுதியில் இனந்தெரியாத ஆணொருவரின் சடலம் மீட்பு!

புத்தளம் – மதுரங்குளி களப்பு பிரதேசத்தில் இருந்து இனந்தெரியாத ஆண் ஒருவரின் சடலம் ஒன்று இன்று (22) பகல் மீட்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் மதுரங்குளி பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற தகவலின் பேரில் அங்கு சென்ற பொலிஸாரும் , புத்தளம் தடவியல் பொலிஸாரும் இணைந்து விசாரனைகளை மேற்கொண்டனர்.

இவ்வாறு  சடலமாக மீட்கப்பட்ட நபர் தொடர்பில் இதுவரை தகவல் எதுவும் தெரியவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.

களப்பு பகுதியில் இருந்து மீட்கப்பட்ட சடலம், நீதிவான் விசாரனையின் பின்னர் பிரேத பரிசோதனைக்காக புத்தளம் தள வைத்தியசாலைக்கு அனுப்பபட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதுதொடர்பில் மதுரங்குளி பொலிஸார் மேலதிக விசாரனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles