NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

மதுரங்குளி வாகன விபத்தில் பாடசாலை மாணவன் பலி!

சிலாபம் மதுரங்குளி – விருதொட்ட பிரதேசத்தில் நேற்றிரவு இடம்பெற்ற வாகன விபத்தில் பாடசாலை மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

நேற்றிரவு 9.30 அளவில் மோட்டார் சைக்கிள் மீது லொறி மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டதாக மதுரங்குளி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மோட்டார் சைக்கிள் மின் விளக்கு இன்றி வீதியில் ஓட்டிச் செல்லப்பட்டுள்ளது.

இந்த சம்பவத்தில் மதுரங்குளி – விருதொட்ட பிரதேசத்தை சேர்ந்த 15 வயதான மாணவனே உயிரிழந்துள்ளார்.

பிரதேசத்தில் உள்ள பள்ளிவாசலுக்கு அருகில் உள்ள வீதியில் லொறியை திரும்ப முயற்சித்த போது இந்த விபத்து நடந்துள்ளது. மோட்டார் சைக்கிள் பதிவு செய்யப்படாது எனவும் பொலிஸார் கூறியுள்ளார்.

சம்பவத்தில் படுகாயமடைந்த மாணவன் புத்தளம் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்துள்ளார்.

சம்பவம் குறித்து மதுரங்குளி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles