NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

மது போதையில் புகையிரதத்தில் மோதி இளைஞர் பலி…!

மட்டக்களப்பு  பிரதேசத்தில் மது போதையில் புகையிரத பாதையில் சென்று கொண்டிருந்த போது புகையிரதத்தினால் மோதப்பட்டு இளைஞர் ஒருவர்  உயிரிழந்துள்ளதாக மட்டக்களப்பு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நேற்று (23) மாலை இடம்பெற்றதாக மட்டக்களப்பு பொலிஸ் அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.

மேலும் தெரிவிக்கையில்,உயிரிழந்தவர் மட்டக்களப்பு , குமாரபுரம் பிரதேசத்தை சேர்ந்த 23 வயதுடைய இளைஞர், மட்டக்களப்பு இருந்து கொழும்பு கோட்டை நோக்கி பயணித்த புகையிரதத்தில் மோதப்பட்டு உயிரிழந்துள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளனர்.

உயிரிழந்தவரின் சடலம் மட்டக்களப்பு வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன்  இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டக்களப்பு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles