NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

மறைந்த இரா.சம்பந்தனின் இறுதிக் கிரியை இன்று..!

தமிழ் தேசிய கூட்டமைப்பின் பெருந்தலைவர் இரா.சம்பந்தனின் இறுதிக் கிரியை இன்றைய தினம் இடம்பெறவுள்ளது.

இரா.சம்பந்தனின் சொந்த ஊரான திருகோணமலையில் அவரது இறுதிக் கிரியை இடம்பெறவுள்ளது.

வயது மூப்பு, உடல்நலக்குறைவு காரணமாகக் கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலையொன்றில் சிகிச்சை பெற்றுவந்த இரா. சம்பந்தன் கடந்த ஜூன் மாதம் 30 ஆம் திகதி இரவு தமது 91 ஆவது வயதில் காலமானார்.

கொழும்பில் உள்ள தனியார் மலர்சாலையொன்றில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்த அவரது பூதவுடல் புதன்கிழமை பாராளுமன்றில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.

அதன்பின்னர், அவரின் பூதவுடல் யாழ்ப்பாணத்துக்கு கொண்டு செல்லப்பட்டு அஞ்சலிக்காக வைக்கப்பட்டதையடுத்து, திருகோணமலையில் உள்ள அவரது இல்லத்தில் இன்று நண்பகல் 12.00 மணிவரை அஞ்சலிக்காக வைக்கப்படவுள்ளது.அதனைத்தொடர்ந்து அவரின் இறுதிக் கிரியைகள் இடம்பெறவுள்ளது.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles