மலேசியாவின் கோலாலம்பூர் செந்துல் பிரதேசத்தில் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்திய ஒரே இடத்தில் இலங்கையர்கள் மூன்று பேர் கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய இரண்டு சந்தேக நபர் பொலிஸாரிடம் சரணடைந்துள்ளதை மலேசியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகராலயம் உறுதிப்படுத்தியுள்ளது.
சந்தேக நபர்கள் இலங்கையர்கள் என்றும் தகவல் கிடைத்துள்ளதாகவும் உயர்ஸதானிகராலயம் குறிப்பிட்டுள்ளது.
மலேசியாவின் செந்துல் லோவர் கோயில் கிராமத்தில் பர்ஹென்டியன் வீதியில் உள்ள வீடொன்றில் கடந்த 22 ஆம் ஆம் திகதி மூன்று பேர் கொலை செய்யப்பட்டனர்.
கைகள் கட்டப்பட்ட நிலையில், தலை பிளாஸ்டிக் பைகளில் மூடப்பட்டிருந்த நிலையில் காணப்பட்ட இலங்கையர்களின் சடலங்களை மலேசிய பொலிஸார் கடந்த 23 ஆம் திகதி மீட்டுள்ளனர்.
சம்பவத்தில் கொல்லப்பட்டவர்கள் சம்பவம் நடந்த வீட்டில் அறையை வாடகைக்கு எடுத்து தங்கியிருந்தவர்கள். சம்பவத்தில் 20 முதல் 40 வயதுக்குட்பட்டவர்களே கொல்லப்பட்டுள்ளனர்.