NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

மாலைதீவில் இடம்பெற்ற உடற்கட்டமைப்பு போட்டியில் இலங்கை வீரருக்கு வெண்கலப் பதக்கம்!

மாலைதீவில் நடைபெற்ற 14வது தெற்காசிய உடற்கட்டமைப்பு மற்றும் உடற்கட்டமைப்பு விளையாட்டு சாம்பியன்ஷிப் போட்டியில் இலங்கையை பிரதிநிதிதுவப்புத்திய விஷ்வ தாருகா வெண்கலப் பதக்கத்தை வென்றுள்ளார்.

2024 ஜூன் 8ஆம் திகதி இடம்பெற்ற ஆண்களுக்கான 175 kg எடை பிரிவில் விஷ்வ தாருகா வெண்கலப் பதக்கத்தை வென்றுள்ளார்.

தெற்காசிய பாடிபில்டிங் மற்றும் பிசிக் ஸ்போர்ட்ஸ் ஃபெடரேஷனால் ஏற்பாடு செய்யப்பட்டு, உலக உடற்கட்டமைப்பு மற்றும் உடல் விளையாட்டு சம்மேளனம் மற்றும் ஆசிய உடற்கட்டமைப்பு உடல் விளையாட்டு சம்மேளனம் ஆகியவற்றின் ஆகியவை இணைந்து போட்டியை நடத்தின் இதில் தனது வெற்றியை விஷ்வா தனது மறைந்த மனைவிக்காக அர்ப்பணித்துள்ளார்.

விஷ்வா தனக்கு உதவி செய்தும், போட்டிகளில் பங்கேற்க ஊக்குவித்தும் விளையாட்டில் தன்னை ஊக்கப்படுத்தியது அவரது மனைவிதான் என கூறியுள்ளார்.

இதன்போது விஷ்வா, கடந்த ஆண்டு ஒரு மழை நாளில் துரதிர்ஷ்டவசமான சம்பவத்தில் தனது மனைவி இறந்துவிட்டதாக கண்ணீருடன் தெறிவித்தார்.

விஷ்வாவின் கூற்றுப்படி, ‘“இந்த போட்டியில் வெற்றி பெறுவேன் என்று எனது மனைவி காத்திருந்தார், இறுதியாக, வெண்கலப் பதக்கம் வென்றதில் மகிழ்ச்சி. இந்த வெற்றியை தனது மறைந்த மனைவிக்கு அன்புடன் அர்ப்பணிக்கின்றேன்” என்றார்.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles