NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

மின்சாரக் கட்டணத் திருத்தம் தொடர்பில் இன்று இறுதி தீர்மானம்!

(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)

மின்சாரக் கட்டணத் திருத்தம் தொடர்பில் மின்சார சபையினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள யோசனை தொடர்பில் இன்று (30) இறுதி தீர்மானம் எடுக்கவுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் மஞ்சுள பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

ஜூலை முதலாம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் மின்சாரக் கட்டணத்தை குறைக்க மின்சார சபை முன்மொழிந்துள்ளதுடன், அது தொடர்பான முன்மொழிவு தொடர்பாக பொதுமக்களின் கருத்துக்களைப் பெறுவதற்கு பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு நடவடிக்கை எடுத்துள்ளது.

இதற்கான பணிகள் கடந்த 27ஆம் திகதி நிறைவடைந்ததாகவும், கருத்துகள் மற்றும் ஆலோசனைகள் தற்போது ஆணைக்குழுவில் பரிசீலனை செய்யப்பட்டு வருவதாகவும் ஆணைக்குழு மேலும் தெரிவித்துள்ளது.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles