NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

மின்சாரம் தாக்கி பாடசாலை மாணவன் உயிரிழப்பு!

ரத்தோட்ட கிராமப் பகுதியில் மின்சாரம் தாக்கி பாடசாலை மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

அப்பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் தென்னை மரத்தில் ஏறி இளநீர் பறிக்க முற்பட்ட பாடசாலை மாணவர் ஒருவரே இவ்வாறு மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த மாணவன் இளநீர் பறிக்கச் சென்றபோது, மற்றுமொரு மாணவன் கொடுத்த மூங்கில் மரம் ஒன்று மின்சார கம்பியில் மோதி மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர் கம்மதுவ களுகல்தன்ன பிரதேசத்தில் வசிக்கும் 16 வயதுடைய அதே பாடசாலையில் 11ஆம் ஆண்டில் கல்வி கற்கும் அகலங்க் இந்துவர என்ற மாணவர் என தெரிவிக்கப்படுகிறது.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles