NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

மின்சார பஸ்களை சேவையில் ஈடுபடுத்த அமைச்சரவை அனுமதி!

கொழும்பில் மின்சார பஸ்களை சேவையில் ஈடுபடுத்துவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

அதன்படி, எதிர்காலத்தில் மின்சார பஸ்களை இயக்குவதற்கு எதிர்பார்த்துள்ளதாகவும், பஸ்கள் மட்டுமின்றி முச்சக்கரவண்டி, வேன்கள் மற்றும் புகையிரதங்களையும் மின்சாரமாக மாற்ற முயற்சித்து வருதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

மேலும், இந்த ஆண்டில், தனியார் துறை, மின்சார முச்சக்கர வண்டிகளை சந்தையில் அறிமுகப்படுத்தும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, நாட்டின் பல்வேறு பகுதிகளிலுள்ள இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான நட்டத்தில் இயங்கும் டிப்போக்களை மூடுவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles