பிரித்தானியா முழுவதும் Eris என்ற குறியீட்டுப் பெயருடன் EG.5.1 என அழைக்கப்படும் புதியவகை கொரோனா வேகமாக பரவி மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பிரித்தானியாவின் மோசமான காலநிலை காரணமாக அங்கு அதிக அளவிலான மக்களுக்கு தலைவலி, காய்ச்சல், மூக்கில் நீர்வடிதல் போன்ற அறிகுறிகள் தென்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இது அதிகமான மக்களிடம் வேகமாக பரவி வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையடுத்து பிரித்தானியாவின் சுகாதார பாதுகாப்பு முகவரகம் இது குறித்து ஆராய்ந்த போது இது ஒமிக்ரோனின் மாறுபாடு அடைந்த கொரோனா வைரஸ் கிருமி என கண்டறியப்பட்டுள்ளது.
இந்நிலையில், தற்போது இந்த வைரஸ் பிரித்தியானாவில் 7 பேரில் ஒருவருக்கு என பரவியிருப்பதாகவும், இதற்கு கிரேக்க தெய்வத்தின் பெயரான எரிஸ் என்ற பெயர் சூட்டப்பட்டுள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள் மேலும் தெரிவித்துள்ளன.