NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

மீரிகம பகுதியில் புகையிரதத்துடன் கொள்கலன் மோதுண்டு விபத்து!

(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)

மீரிகம – வில்வத்தை பகுதியில் கொள்கலனொன்று புகையிரதத்துடன் மோதுண்டு விபத்து ஏற்பட்டுள்ளது.

இதனால், வடக்கு மற்றும் மலையக புகையிரத மார்க்கங்களில் புகையிரத போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாகவும் புகையிரத திணைக்களம் அறிவித்துள்ளது.

பொல்கஹவெலயில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த ‘பௌஃபி கர்லயால’ புகையிரதத்துடன் இந்த கொள்கலன் மோதியுள்ளது.

மோதுண்ட கொள்கலன் பெட்டி சுமார் 100 மீற்றர் தூரம் இழுத்துச் செல்லப்பட்டு நிறுத்தப்பட்டதால் புகையிரத சமிஞ்சைகள், மின்கம்பங்கள், புகையிரத கதவுகள் என்பன பலத்த சேதம் அடைந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இந்த விபத்தால், புகையிரத சக்கரங்கள் மற்றும் இயந்திரம் பலத்த சேதமடைந்துள்ளன. இதனால் பல புiகியரத சேவைகள் தாமதமாக புறப்படுவதாக திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles