(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)
மாத்தளையிலிருந்து தம்புள்ளை நோக்கிச் சென்ற முச்சக்கரவண்டி மற்றும் தம்புள்ளையிலிருந்து வந்த கார் ஒன்றுடன்ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில், இருவர் உயிரிழந்துள்ளதுடன் ஒருவர் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
விபத்தின் பின்னர் முச்சக்கரவண்டி தீப்பிடித்து முற்றாக எரிந்து நாசமாகியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
நாவுல – அரங்கல பிரதேசத்தில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதுடன்இ காரின் சாரதியை நாவுல பொலிஸார் கைது செய்துள்ளனர்.
சம்பவத்தில், 65 வயதுடைய ஒருவரும் மற்றும் 76 வயதுடைய இருவருமே உயிரிழந்துள்ளனர்.