NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

முன்னாள் சுகாதார அமைச்சருக்கு விளக்கமறியல் காலம் மேலும் நீட்டிக்கப்பட்டது!

சர்ச்சையை ஏற்படுத்திய இம்யூனோகுளோபுலின் சம்பவம் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல எதிர்வரும் மேலும் இம்மாதம் மாதம் 22ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

முன்னாள் சுகாதார அமைச்சர் மற்றும் சந்தேகநபர்கள் குழுவினர் மாளிகாகந்த நீதவான் நீதிமன்றத்தில் இன்று முன்னிலைப்படுத்தப்பட்டனர்.

அங்கு முதலாம், இரண்டாவது, மூன்றாவது, நான்காவது, ஆறாவது, ஏழாவது மற்றும் எட்டாவது சந்தேகநபர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டு ஐந்தாவது சந்தேகநபர் பிணையில் விடுவிக்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ள அதே நேரம் ,10ஆம் மற்றும் 11ஆம் சந்தேக நபர்களை எதிர்வரும் 10ஆம் திகதி மீண்டும் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தி பிணை வழங்குவதா இல்லையா என்பதை தீர்மானிக்குமாறு நீதவான் உத்தரவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles