NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

மும்பையில் புயலில் சிக்குண்டு விழுந்த விளம்பர பலகையால் 14 பேர் உயிரிழப்பு!

மும்பையில் ஏற்பட்ட புழுதிப் புயல் காரணமாக பாரிய விளம்பர பலகை ஒன்று சரிந்து விழுந்ததில் 14 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 60க்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மும்பை மாநகரில் நேற்று வீசிய பலத்த காற்றினால் விளம்பர பலகை இடிந்து விழுந்ததாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகில் பொருத்தப்பட்டிருந்த விளம்பர பலகை இடிந்து வீழ்ந்துள்ளதுடன் பல வாகனங்களும் பாரிய சேதங்களுக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில், குறித்த விளம்பர அறிவிப்பு பலகை சட்ட அனுமதியுடன் நிறுவப்பட்டுள்ளதா என்பது குறித்து விசாரணை நடத்த மகாராஷ்டிர முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

விளம்பர பலகையில் இருந்து உலோகச் சட்டங்கள் எரிபொருள் நிலையத்தில் இருந்த பல வாகனங்களின் மீது விழுந்து சேதங்களை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேசிய பேரிடர் மீட்புப் படையின் குழுக்கள் சம்பவ இடத்தில் இருப்பதாகவும், இடிபாடுகளில் சிக்கியவர்களைத் தேடி வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ஐந்து லட்சம் ரூபா இழப்பீடு வழங்க உத்தரவிடப்பட்டுள்ளதாக மகாராஷ்டிர முதல்வர் தெரிவித்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் அதிகாரிகள் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles