NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

முருகன், நளினி உள்ளிட்ட நால்வரை இலங்கைக்கு அனுப்ப முடிவு!

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுதலையான முருகன், நளினி உள்ளிட்ட 4 பேரை இலங்கைக்கு திருப்பி அனுப்ப நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு பதில் மனு தாக்கல் செய்துள்ளது.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் முருகன், நளினி உட்பட 4 பேரை விடுவித்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்ததையடுத்து, முருகனை திருச்சி அகதிகள் முகாமில் இருந்து விடுவித்து தன்னுடன் சேர்ந்து வாழ அனுமதிக்க கோரி நளினி வழக்கு தொடர்ந்தார்.

4 பேரின் கடவுச்சீட்டு உள்ளிட்ட பயண ஆவணங்கள் கேட்டு கடந்த டிசம்பர் மாதத்தில் இந்தியாவிற்கான இலங்கை துணை தூதரகத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

பயண ஆவணங்கள் கிடைத்தவுடன் 4 பேரும் இலங்கைக்கு அனுப்பப்படுவார்கள் எனவும் மத்திய அரசு கூறியுள்ளது.

இதேவேளை, நளினி இந்திய பிரஜை என்பதுடன், அவரது கணவரான முருகன் இலங்கைப் பிரஜையாவார். இதையடுத்து நளினியின் சேர்ந்து வாழ அனுமதிக்கும் கோரிக்கைக்கு அமைய அவரையும் இலங்கை அனுப்ப நடவடிக்கை எடுக்கப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன..

இதேவேளை, விடுதலையான முருகன் தன்னை இலங்கைக்கு அனுப்புமாறு கோரிக்கை விடுத்திருந்ததுடன், இலங்கயிலுள்ள அவரது தாயாரும் தனது மகனை மீண்டும் தன்னுடன் சேர்த்து வைக்குமாறு கோரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles