NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

மெக்சிகோவில் ‘ஓடிஸ்’ சூறாவளி தாக்கம் – 27 பேர் பலி!

வட அமெரிக்க நாடான மெக்சிகோவின் பசிபிக் கடற்கரையில் ‘ஓடிஸ்’ சூறாவளி நேற்று முன்தினம் கரையை கடந்தது.

அப்போது பெய்த கனமழை மற்றும் அதிவேக காற்று காரணமாக மெக்சிகோவின் கடற்கரை பகுதிகளில் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது.

சூறாவளி கரையை கடந்த அகாபுல்கோ பகுதியில் மரங்கள் சாய்ந்து மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டன. 100க்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்து சேதமடைந்துள்ளன. 

இந்த இடிபாடுகளில் சிக்கி இதுவரையில் 27 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 4 பேர் மாயமாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles