NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

மோட்டார் சைக்கிளில் பயணித்த மாணவர் விபத்துக்குள்ளாகி உயிரிழப்பு !

குருநாகல் – கல்கமுவ எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு பின்புறமாக புனரமைக்கப்பட்ட தொடருந்து பாதையில் பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று கால்வாயில் வீழ்ந்ததில் பாடசாலை மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் இருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

பலுகடவல பிரதேசத்தைச் சேர்ந்த எம்.டி.சாமோத் வசல என்ற 17 வயதுடைய மாணவனே விபத்தில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பலுகடவலவிலிருந்து கல்கமுவ நகரை நோக்கி நிர்மாணிக்கப்பட்டு வரும் தொடருந்து பாதையில் மோட்டார் சைக்கிளில் குறித்தமூவரும் பயணித்துள்ளனர்.

இந்நிலையில் விபத்தில் காயமடைந்த இருவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், ஒருவர் குருநாகல் போதனா வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக மாற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles