NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

யாழில் விபரீத முடிவால் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழப்பு

யாழ்ப்பாணம் நீர்வேலி பகுதியில் தவறான முடிவெடுத்து குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவம் நேற்று (10.06.2024) இடம்பெற்றுள்ளது.இந்த சம்பவத்தில் வேவிபுரம், அச்செழு, நீர்வேலி பகுதியைச் சேர்ந்த 31 வயதுடைய ஆனந்தன் முகுந்தன் என்ற இரண்டு பிள்ளைகளின் தந்தையே உயிரிழந்துள்ளார்.

அத்துடன், மன விரக்தியால் பாதிக்கப்பட்டிருந்த நிலையிலேயே அவர் தவறான முடிவெடுத்துள்ளார் என பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

மேலும், உயிரிழந்தவரின் சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டுள்ளதுடன் உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles