NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

யாழ்ப்பாணம் – இளவாலை பகுதியில் விபத்து ஒருவர் உயிரிழப்பு!

யாழ்ப்பாணம் – இளவாலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பெரியவிளான் பற்றிமா தேவாலயத்திற்கு அருகில் நேற்று இரவு இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

வீதியோரத்தில் இருந்த இருவர் மீது தனியார் பஸ் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

அந்த பகுதியைச் சேர்ந்த 76 வயதான நபரும் அவரது மகனும் விபத்தில் படுகாயமடைந்தனர்.

பின்னர் தெல்லிப்பழை வைத்தியசாலையில் அவர்கள் அனுமதிக்கப்பட்ட நிலையில் தந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

அவரது மகன் படுகாயமடைந்த நிலையில்இ சிகிச்சைப் பெற்றுவருகிறார்.

பஸ்ஸின் சாரதி தப்பியோடியுள்ள நிலையில், இளவாலை பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Share:

Related Articles