NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

யாழ். கோண்டாவில் இடம்பெற்ற விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவர் பலி!

யாழ். கோண்டாவில் – காரைக்காலை அண்மித்த பகுதியில் நேற்று (14) இடம்பெற்ற விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

இணுவில் கிழக்கு தொடருந்து கடவை பகுதியில் ஏற்பட்ட குறித்த விபத்தில், ஒரே குடும்பத்தை சேர்ந்த இருவர் உயிரிழந்ததோடு ஒருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவரும் வானில் பயணித்த வேளை, இணுவில் கிழக்கு புகையிரத கடவையை கடக்க முற்பட்ட போது, புகையிரதத்துடன் மோதி விபத்து நேர்ந்துள்ளது.

இந்நிலையில், விபத்துக்குள்ளான மூவரில் கணவன் மற்றும் குழந்தை சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதோடு, மனைவி அதிதீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகிறது.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles