NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

ராஜ்கோட் பகுதியில் பாரிய தீ விபத்து: 12 குழந்தைகள் உள்ளிட்ட 28 பேர் உயிரிழப்பு

மேற்கு இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் உள்ள ராஜ்கோட் நகரில் உள்ள பொழுதுபோக்கு மையத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 28 பேர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

உயிரிழந்தவர்களில் 12 குழந்தைகள் உள்ளதாகவும், பலி எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தீயில் சிக்கிய உடல்கள் அடையாளம் தெரியாத அளவுக்கு எரிந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

குஜராத் முதல்வர் பூபேந்திர படேல் இன்று காலை நானா – மாவா சாலையில் உள்ள சம்பவ இடத்தையும், காயமடைந்தவர்கள் சிகிச்சை பெற்று வரும்பவர்களையும் பார்வையிட்டுள்ளார். 

உயிரிழந்தவர்களின் உடல்கள் அடையாளம் காண முடியாத அளவிற்கு கருகிவிட்டன.மேலும் இறந்தவர்களின் அடையாளத்தை கண்டுபிடிப்பதற்காக உறவினர்களின் டிஎன்ஏ மாதிரிகளை சேகரிக்கும் செயல்முறையை நாங்கள் முடித்துள்ளோம்,” என்றும் அவர் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.

Share:

Related Articles