NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

வட கொரியாவில் இனி தற்கொலைக்கு தடை!

(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)

வட கொரியாவில் தற்கொலைக்கு தடை விதித்து இரகசிய உத்தரவை, அந்நாட்டு ஜனாதிபதி கிம் பிறப்பித்துள்ளதாக தென் கொரியா தகவல் வெளியிட்டுள்ளது.

இது குறித்து தென் கொரியாவின் உளவு அமைப்பு தெரிவிக்கையில்

வடகொரியாவில் நாளுக்கு நாள் மக்களிடம் கஷ்டம் அதிகரித்து வருகின்றது. மோசமான பொருளாதார சூழல் காரணமாக வட கொரியாவில் தற்கொலைகள் 40 % அதிகரித்துள்ளது. 

வட கொரியாவின் கோங்ஜின் பகுதியில் மட்டும் கடந்த ஆண்டில் 35 பேர் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்கள். 

இதற்கிடையில், கடந்த ஆண்டு வட கொரியாவில் பட்டினிச் சாவுகள் மூன்று மடங்காக அதிகரித்துள்ளது. இதன் காரணமாக தற்கொலைத் தடுப்பு நடவடிக்கைகளில் வட கொரியா இறங்கியுள்ளது.

தற்கொலையை சோசலிசத்திற்கு எதிரான தேசத் துரோகம் என்று தெரிவிக்கும் கிம், அதனைத் தடுக்க இரகசிய உத்தரவையும் பிறப்பித்திருக்கிறார். 

மேலும், தற்கொலைத் தடுப்பு நடவடிக்கைகளை எடுக்க அரசாங்கங்களுக்கு அவர் உத்தரவிட்டுள்ளார் என தெரிவுத்துள்ளது.

முன்னதாக, வட கொரியா மனிதாபிமானமற்ற முறையில் குழந்தைகளையும், கர்ப்பிணிப் பெண்களையும் தூக்கிலிடுகின்றது என்று தென்கொரியா குற்றச்சாட்டியிருந்த நிலையில், இந்த தகவலை தென் கொரியா வெளியிட்டுள்ளது.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles