NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

வர்த்தகர் தினேஷ் ஷாப்டர் கொலை வழக்கு – நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

கொழும்பில் பிரபல தமிழ் வர்த்தகர் தினேஷ் ஷாப்டர் உயிரிழப்பு தொடர்பான விசாரணைகள் மீண்டும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

இதற்கயைம, ஜனசக்தி குழுமத்தின் பணிப்பாளராக இருந்த தினேஷ் ஷாப்டரின் கையடக்கத் தொலைபேசி மற்றும் சிம் அட்டையை ஒரு வாரத்திற்குள் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திற்கு கொழும்பு மேலதிக நீதவான் ரஜீந்திர ஜயசூரிய நேற்று உத்தரவிட்டுள்ளார்.

கைத்தொலைபேசி மற்றும் சிம்கார்டை விசாரணைக்காக அரசாங்க பரிசோதகர் அலுவலகத்தில் சமர்ப்பிக்குமாறு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு மாஜிஸ்திரேட் உத்தரவிட்டுள்ளார்.

தினேஷ் ஷாப்டரின் மரணத்துக்கான காரணம் இதுவரை வெளிவராத நிலையில், இறந்தவர் பயன்படுத்திய தொலைபேசி இலக்கத்தை வழங்குமாறு அவரது மனைவி விடுத்த கோரிக்கைக்கு குற்றப் புலனாய்வுத் திணைக்களம் எதிர்ப்பினை வெளிப்படுத்தியுள்ளது.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles