NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

வறட்சியால் குறைவடைந்த தேயிலை பயிர்ச்செய்கை !

தற்போது நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக தேயிலை இலைகளின் விளைச்சல் சுமார் 30% குறைந்துள்ளதாக தேயிலை விவசாயிகள் கவலை வெளியிட்டுள்ளனர்.

நிலவும் காலநிலை காரணமாக தேயிலை தோட்டங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக தேசிய சிறு தேயிலை தோட்டக்காரர்கள் சம்மேளனத்தின் தேசிய அமைப்பாளர் லால் பிரேமநாத் தெரிவித்தார்.

இதன்படி வறண்ட காலநிலைக்கு முன்னர் ஒரு ஏக்கருக்கு 200 – 300 கிலோ தேயிலை துளிகள் கிடைக்கக்கூடியதாக இருந்த நிலையில் தற்போது 100 – 150 கிலோ வரை குறைந்துள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles