NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

வளிமண்டலவியல் திணைக்களத்தின் எச்சரிக்கை!

வடக்கு வங்கக் கடலைச் சுற்றியுள்ள வளிமண்டலத்தில் இன்று குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாக வாய்ப்பு உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

அதன்படி, குறித்த கடற்பரப்புகளில் மணித்தியாலத்துக்கு 70 முதல் 80 கிலோ மீற்றர் வேகத்தில் பலத்த காற்ற வீசக்கூடும் எனவும் கனமழை பெய்யக்கூடும் எனவும், அந்த கடற்பரப்புகள் மிகவும் கொந்தளிப்பாக இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் வடக்கு வங்காள விரிகுடாவின் ஆழ்கடல் பகுதியில் நெடு நாள் மீன்பிடி படகுகள் மற்றும் கடற்றொழில் நடவடிக்கையில் ஈடுபடும் பணியாளர்கள் உடனடியாக கரைக்கு அல்லது பாதுகாப்பான இடத்திற்கு செல்லுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

நேற்று பிற்பகல் 3:30 மணிக்கு வெளியிடப்பட்ட இந்த அறிவிப்பு இன்று பிற்பகல் 3:30 மணி வரை செல்லுபடியாகும் என வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles