NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

வாழைச்சேனையில் 10 பேர் கைது!

மட்டக்களப்பு – வாழைச்சேனைப் பகுதியில் புதையல் தோண்டிய 10 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதாக வாழைச்சேனை பொலிஸார்.

பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த தகவலின் பிரகாரம் சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டதுடன் அகழ்வுக்காக, பயன்படுத்தப்பட்ட உபகரணங்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக விசேட அதிரடிப்படையினர் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் தம்புத்தேகம, அனுராதபுரம்,  பொலன்னறுவை மற்றும் வெலிகந்த ஆகிய பிரதேசங்களை வசிப்பிடமாக கொண்ட 20 தொடக்கம் 64 வயதுடையவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேகநபர்களும் உபகரணங்களும் மேலதிக விசாரணைகளுக்காக வாழைச்சேனை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles