NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

விசாரணைகள் நிறைவடையவில்லை-சந்தேக நபர்களுக்கு விளக்கமறியல்.

குளியாப்பிட்டிய காட்டுப்பகுதியில் இளைஞன் ஒருவன் கொல்லப்பட்டமை தொடர்பில் குளியாப்பிட்டிய பொலிஸாரால் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இவ்வாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.குளியாப்பிட்டிய இளைஞனின் படுகொலைச் சம்பவம் தொடர்பில் அவ்வப்போது கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள 10 சந்தேக நபர்களையும் விளக்கமறியலில் வைக்குமாறு குளியாப்பிட்டிய நீதவான் ரந்திக லக்மால் ஜயலத் இன்று உத்தரவிட்டுள்ளார்.மேலும் இளைஞன் யார், எங்கே, எப்படி கொல்லப்பட்டார் என்ற கேள்வி இன்னும் விசாரணையில் இருப்பதாகவும், ஹலவத்தை ஆதார வைத்தியசாலையில் அவரது சடலத்தின் பிரேதப் பரிசோதனை இன்னும் நிறைவடையவில்லை என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.அத்துடன், இந்தக் கொலையானது நன்கு திட்டமிடப்பட்டு நுட்பமான முறையில் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவித்த பொலிஸார், இது தொடர்பான விசாரணைகள் நிறைவடையவில்லை எனவும் பொலிஸார் நீதிமன்றில் சுட்டிக்காட்டினர்.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles